Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அடேங்கப்பா 1 கிலோ 5 ஆயிரமா..மலைக்க வைக்கும் மல்லிகை பூ விலை..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நாளை சுபமுகூர்த்தத் தினம் உள்ள நிலையில் தோவாளை மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5000க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

மல்லிகை பூ
மல்லிகை பூ

தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும்  விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப் பொறுத்து விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.
பொதுவாக விசேஷ தினங்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். நாளை முகூர்த்த நாள் என்பதால் இன்று பூக்களின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. இன்றைய நிலவரப்படி  வெளியூர் மல்லிப்பூ – 5000,  உள்ளூர் மல்லிப்பூ – 3000, பிச்சிப்பூ – 1900, அரளிப்பூ – 230, வாடா மல்லி – 150, கேந்தி – 70, சம்பங்கி – 80, முல்லை – 1500, ரோஸ் – 250, ஸ்டம்ப் ரோஸ் – 350, துளசி – 40, தாமரை – 20, மரிக்கொழுந்து – 150, செவ்வந்தி – 200க்கும்.
விற்கப்படுகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.