2025-ம் ஆண்டில் மற்றொரு சுற்று பணியாளர் குறைப்புக்கு தயாராகி வருகிறது தொழில்நுட்பத் துறை. மைக்ரோசாப்ட், கூகிள், அமேசான் மற்றும் க்ரவுட்ஸ்ட்ரைக் போன்ற தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
வருவாய் குறைதல், தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பாரம்பரிய வணிக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு ஆகியவை பணி நீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 61,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் 6,000 பேரைக் குறைத்துள்ளது. இது 2023-ம் ஆண்டுக்குப் பிறகு அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பணிநீக்கமாகவும் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை அதன் நிர்வாக கட்டமைப்பை நெறிப்படுத்துவதையும் பொறியியல் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.