2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, இருண்டு வரும் உலகில் இந்தியா பிரகாசமான ஒளியில் இருப்பதை காட்டுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் என அனைத்தையும் கடந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



