சேலம் டவுன் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட்டில் இருந்து, பட்டை கோயில் செல்லும் தீட்டுக்கல் தெரு தற்போது கனகராஜ கணபதி தெரு, காமராஜர் சிலை செல்லும் வழியில் உள்ளது தினசரி மாலை மட்டும் செயல்படும் சுப்ரமணி கொத்து பரோட்டா கடை.
சோசியல் மீடியாவில் instagram youtube ஃபுட் சேனல்கள் ஒவ்வொன்றாக தினசரி வந்து ரீல்ஸ் எடுத்து போடும் அளவுக்கு கடை தற்போது புகழ்பெற்று விட்டது.
காரணம் இக்கடையின் ஸ்பெஷல் அயிட்டமான கொத்து புரோட்டா.
கொத்து புரோட்டா இங்கு செம டேஸ்ட் ஆக இருக்கும் . புரோட்டா மாஸ்டர் தயாளன் சூடான தோசைக்கல்லில் தக்காளி, வெங்காயம் கருவேப்பிலை மசாலா பொடி இவையெல்லாம் போட்டு வதக்கி சுவையான புரோட்டாவை பிச்சு போட்டு அதன் மேல் சிக்கன் கிரேவியை ஊற்றி டங் டங் டங் என்று ஸ்டைலாக கொத்து போட்டு சூப்பராக கொத்து புரோட்டா போட்டு தருவார்.
ஒரே சமயத்தில் மினிமம் 15 கொத்து புரோட்டா தோசைக்கல்லில் போட்டு பின்பு பிரித்து தருவார்கள்.
சிக்கன் கொத்து புரோட்டாவை இங்கு அனைவரும் விரும்பி வாங்குவார்கள்
மாலை ஆறு மணி ஆனால் போதும் இந்த கடையில் கொத்து புரோட்டா போடும் தோசை கல்லை சுற்றி ஒரு பத்து பதினைந்து பேராவது நின்று பார்சல் வாங்க காத்துக்கொண்டே இருப்பார்கள்.
இக்கடையின் உரிமையாளர் சுப்ரமணி உழைப்பாளி எனக்கு 30 வருடமாக தெரியும் அவர் பனியன் லுங்கி தான் எப்போதும் அவருடைய உடை.
சைவ குருமா, சிக்கன் கறிக்கொழம்பு, தோசைக்கு எசன்ஸ் எல்லாம் தயாரிப்பது சுப்ரமணி அண்ணன் தான்.
இவர்கள் கடை புரோட்டாவிற்கு இருக்கும் டிமான்ட்க்கு வழக்கமான புரோட்டா போட்டு பின்பு அதை கொத்து புரோட்டா ஆக்கினால் நேரம் இழுக்கும் என்பதால், முதலில் எட்டு சின்ன புரோட்டாவுக்கு சமமான பெரிய பீடா பிசைந்து ஜம்போ புரோட்டா சுட்டு வைத்துக் கொள்வார்கள்.
பின்பு ஜம்போ பரோட்டாவை வைத்து கொத்து புரோட்டா போட்டு சீக்கிரம் கொடுத்து விடுவார்கள்.
அவர்கள் கடையில் சைவ எசன்ஸ்தோசை மற்றும் தோசை, முட்டை அயிட்டங்கள் உண்டு.
இங்கு சாதா பரோட்டாவும் சாப்பிட சுவையாக இருக்கும்.
எங்கெங்கிருந்தோ எல்லாம் மக்கள் தேடி வந்து இங்கு கொத்து புரோட்டா பார்சல் வாங்கி செல்வதை நான் பார்த்துள்ளேன்.
இதுவரை சேலம் பொன்னம்மா பேட்டை தீட்டுக்கல் தெரு சுப்ரமணி கடை கொத்து புரோட்டா சாப்பிடாதவர்கள் இன்றே சென்று சாப்பிட்டு பாருங்கள்.
–ஈசன்எழில்விழியன்