விபத்தில் உயிரிழந்தவரின் டெபிட் கார்டுக்கு காப்பீடு தொகை நஷ்டயீடாக ரூ. 3,10,00 வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி நீலா(45). பாண்டியன் 2024-ம் ஆணடு ஜீலை 12-ந் தேதி சாலை விபத்தில் இறந்து விட்டார். பாண்டியன் திருவாரூர் தெற்கு வீதியிலுள்ள ஒரு தனியார் வங்கியில் வைத்திருந்த சேமிப்பு கணக்குக்காக, வங்கி அவருக்கு ரூபே பிளாட்டினம் என்ற டெபிட் கார்டை வழங்கியிருக்கிறது. அந்த கார்டு 2026 டிசம்பர் வரை பயன்படுத்தக் கூடியதாகும்.
ரூபே கார்டு விதிமுறைகளின்படி அந்த கார்டை பயனபடுத்தும் நபர் பயன்படுத்தும் காலத்தில் இறந்து விட்டால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடாக பெறலாம். ஆனால், அதற்கு முக்கியமான நிபந்தனையாக இறப்பதற்கு 45 நாட்களுளுக்கு முன்பாக ரூபே கார்டை பயன்படுத்தி ஏதேனும் ஒரு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
பாண்டியன் கடைசியாக 2024 ஜீன் மாதம் 9-ம் தேதி அன்று அதாவது இறப்பதறகு 33 நாட்கள் முன்பாக பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார். எனவே, நீலா தனது கணவர் இறப்பினால் கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகை கோரி வங்கியில் விண்ணப்பிர்திருக்கிறார். ஆனால் 45 நாட்கள் என்ற விதமுறை 2022 ஆண்டு மார்ச் 31-ம் தேதி முதல் 30 நாட்களாகக் குறைக்கப்பட்டு விட்டது. அதனால், காப்பீட்டுத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறி, அவரது விண்ணப்பத்தை வங்கியும், அதன் காப்பீட்டு நிறுவனமும் நிராகரித்திருக்கிறார்கள்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த நீலா 2025 மார்ச் மாதம் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மோகன்ராஜ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். அதில், விதிமுறைகள் மாற்றப்பட்டு பணப்பரிவர்த்தனைக்கான 45 நாட்கள் என்பது நாட்களாகக் குறைக்கப்பட்ட விவரங்களை புகார்தாரருக்கு முறைப்படி தெரியப்படுத்தியிருக்க வேண்டியது வங்கியின் கடமை.
வங்கி அவ்வாறு தெரியப்படுத்தாத நிலையில், வங்கியும் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து நீலாவுக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம், நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.