நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2025 நிதியாண்டில் இந்தியாவில் மிகவும் லாபகரமான வங்கியாக மாறியுள்ளது. அதாவது HDFC வங்கி மற்றும் ICICI வங்கி போன்ற முன்னணி தனியார் துறை வங்கிகளை முந்திச் சென்றிருப்பதாகவும், நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஈட்டிய மொத்த நிகர லாபத்தில் SBI மட்டும் 40% க்கும் அதிகமாக பங்களித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
2025 நிதியாண்டில், எஸ் பி ஐ வங்கி ரூ. 70,901 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது. இது 2024 நிதியாண்டில் ரூ.61,077 கோடியிலிருந்து 16% அதிகமாகும். வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி, ஆண்டுக்கு ஆண்டு 17.89% அதிகரித்து ரூ. 1,10,579 கோடியாக உள்ளது உள்ளது என தெரிவித்திருக்கிறார்கள்.
எஸ்பிஐ நிதியாண்டில் ரூ.77,561 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, SBI ஐ உலகின் மிகவும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாகவும், ஆல்பாபெட், ஆப்பிள், NVIDIA மற்றும் JPMorgan Chase போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் சேர்த்தும் வைக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, 2024-25ம் நிதியாண்டில் ரூ. 67,347.36 கோடி நிகர லாபத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி ரூ.47,226.99 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுத்துறை வங்கிகள் சாதனை லாபத்தை ஈட்டியுள்ளன. மேலும் மொத்தம் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் கூட்டு நிகர லாபம் FY25 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.78 லட்சம் கோடியை ஈட்டியுள்ளது. இது 2024-25ம் நிதியாண்டில் ரூ.1.41 லட்சம் கோடியிலிருந்து 26% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிக்கும் லாபம் தோராயமாக ரூ. 37,100 கோடியாக இருந்தது.
எஸ்பிஐ முதன்மை பங்களிப்பாளராக இருந்தது. 2024-25ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த PSU வங்கிகளின் வருவாயில் 40% க்கும் அதிகமாக இருந்தது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுத்துறை வங்கிகளில் அதிகபட்ச நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இது அதன் லாபத்தை இரட்டிப்பாக்கி ரூ.16,630 கோடியாக அதிகரித்துள்ளது. இது 102% ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்திருக்கிறது. பஞ்சாப் & சிந்து வங்கி 71% லாபத்தை அதிகரித்து ரூ.1,016 கோடியாக அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டில் 12 பொதுத்துறை வங்கிகளும் லாப வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 48.4% அதிகரித்து ரூ.3,785 கோடியாகவும், யூகோ வங்கியின் லாபம் 47.8% அதிகரித்து ரூ.2,445 கோடியாகவும், பாங்க் ஆஃப் இந்தியா 45.9% அதிகரித்து ரூ.9,219 கோடியாகவும், புனேவை தலைமையிடமாக கொண்ட மகாராஷ்டிரா வங்கி நிகர லாபத்தில் 36.1% அதிகரித்து ரூ.5,520 கோடியாகவும், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி 35.4% அதிகரித்து ரூ.10,918 கோடியாகவும் லாபத்தை அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.