எத்தனை வளர்ந்த பெரியவர்களாலும் சிறிய வயதில் சுவைத்த மிட்டாயின் சுவை என்றுமே மறக்க முடியாக ஒன்று. நம் வீட்டில் பெற்றோரிடம் அடம் பிடித்ததும், சகோதர சகோதரிகளிடம் மிட்டாய்க்ளுக்காக சண்டையிட்டதும் மறக்க முடியாத அநுபவங்களே. அதுவும் பாரம்பரியமாக செய்யப்படும் இனிப்புகளுக்கு இன்னும் வரவேற்பு அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படி திருச்சியில் பெரிய கடை வீதியில இருக்கும் மிட்டாய்கடை தான் யானை மார்க் நெய் மிட்டாய்கடை.
திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள இந்த யானை மார்க் மிட்டாய் கடைக்கு சமீபத்தில் சென்றேன் அப்போது அங்கு நடந்த சம்பவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது..
எனது 2 வயது மகளுடன் சென்று இனிப்பு வாங்கினேன்.அப்போது கடை ஊழியர் நான் வாங்கிய பூந்தி இல்லாமல் 50 கிராம் அளவுள்ள பூந்தியை குழந்தை கையில் மடித்து கொடுத்தார். எதற்காக இது என்று கேட்டேன் ?
குழந்தைக்கு நான் தான் வாங்கி இருக்கேனே. பிறகு எதற்கு இந்த பூந்தி என்று கேட்டேன், கடை உரிமையாளர் இது எங்கள் கடையின் பாரம்பரியம் என்று கூறினார். எனக்கு ஆர்வம் அதிமகமானது. தொடர்ந்து அவர் கூறிய தகவல்கள் உங்களுக்காக…..
எங்கள் கடை 60 வருட கால பாரம்பரியம் உடையது. இப்போது உள்ள கால கட்டத்தில் சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட மிட்டாய என்றால் அது நம்ப கடை மிட்டாய் தான் அவ்வளவு சுவையாக இருக்கும், பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளை அழைத்து வந்து இனிப்பு பலகாரங்களை வாங்கி செல்வார்கள். அப்போது அவர்கள் வாங்கிய இனிப்புகளை குழந்தைகள் கடையின் வாசலில் வைத்து பிரித்து தருமாறு பெற்றோர்களிடம் அடம் பிடித்து அழும், வீட்டிற்கு செல்லும் வரை அவர்கள் வாங்கிய பொட்டலங்களை பிரிக்கச் சொல்லி.
நம் கடைக்கு வரும் குழந்தைகள் அழுதபடி செல்லக்கூடாது. என்பதற்காக இப்படி வழங்கினோம் அன்று முதல் இன்று வரை இதை பாரம்பரியமாக செய்து வருகிறோம். குழந்தைகக்கு கொடுக்கும் இந்த இனிப்பிற்கு காசு வாங்குவது இல்லை என்று கூறி நகர்ந்தார் உரிமையாளர். இந்த சம்பவத்தில் ஒன்று புரிந்து கொண்டேன் குழந்தைகளை அவர்கள் குழந்தையாக பார்த்தது தான். இன்றைய கார்பரேட் உலகமோ குழந்தைகளை வியாபார சந்தையின் நுகர்வோராக பார்க்கிறது உதாரணமாக சாக்லேட் பந்து போன்ற முட்டை வடிவிலான இனிப்பு ஒன்றின் விலை 45 ரூபாய் கொள்ளை லாபம் குழந்தைகளை வைத்து பார்க்கிறது. பெற்றோர்களே சற்று சிந்யதியுங்கள்.
இது போன்ற பாரம்பரிய கடையில் தயாரிக்கப்படும் சுத்தமான இனிப்பு பலகாரங்களை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள் எந்த கெடுதலும் வராது. இந்த பதிவை முக நுலில் பார்த்து ரசித்து கடந்து சென்ற அனுபவம் இருக்கும். இப்படியானபழக்கத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள யானை மார்க் மிட்டாய் கடைக்கு இன்னும் பல சுவாரசியக்கதைகள் உள்ளன. தினமும் பெரியக்கடை வீதியில் இருக்கும் ஆடு, மாடுகள் இங்க குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து நீரும், இரையும் உண்கின்றன. கடையில் வேலை செய்யும் ஆட்கள் “இவங்க எல்லாம் எங்கள் ரெகுலர் கஸ்டமர்” என்று ஒது கை நிறைய பூந்தியும் அள்ளி கால்நடைக்ளுக்கு கொடுக்கின்றனர். அங்கு வரும் சிறார்களுக்கும் கைநிறைய பூந்தி அள்ளிக்கொடுத்து மகிழ்கின்றனர்.
நுற்றாண்டு பழமையான பாரம்பரியம் மிகுந்த யானை மார்க் மிட்டாய் கடையின் உரிமையாளர் கண்ணனிடம் பேசினோம், “எங்க தாத்தா நடேசன் பிள்ளை 1916 இந்த கடையை ஆரம்பிச்சாரு. அப்பறம் எங்க அப்பா பாக்கியராஜ் அதுக்கப்பறம் நானும் என் தம்பி ரவிச்சந்திரனும் தான் இந்த கடையை பார்த்துட்டு வறோம். எங்க கடையில லட்டு, மைசூர் பாக்கு, பாதுஷா, சந்திர கலா, அல்வா, மடக்கு பூரி, சோன்பப்டின்னு நிறைய மிட்டாய் இருந்தாலும் பூந்தி தான் ஸ்பெஷல். திருச்சி கூடை மிட்டாய் எல்லா ஊருலயும் பேமசு.
எங்க தாத்தா காலத்துல இருந்த அதே பார்முலாவில் தான் இப்போவரை பூந்தி போட்டுக்கிட்டு இருக்கோம். கடலைமாவும் அரிசிமாவும் கலந்து நெய்ல பொரிச்சு எடுப்போம் பேப்பரும் பிளாஷ்டிக்கும் தாத்தா கலாத்துல கிடைக்கிறது ரொம்ப கஷ்டம், அதனால மூங்கில் தட்டுல தாமரை இலை வச்சு அதுல பூந்திய வச்சு கொடுப்பாங்க. இந்த மூங்கில் கூடை செய்யவே இப்போ 5 ரூபா ஆகுது. ஆனாலும் அடையாளமும் பாரம்பரியமும் மாறக்கூடாதுன்னு தான் இந்த கூடைல கொடுத்துட்டு இருக்கோம். சிவாஜி, கலைஞர், வைகோன்னு பல பிரபலங்களுக்கு நம்ம மிட்டாய்னா அவ்வளவு இஷ்டம். 3 தலைமுறையா எப்படி நாம வியாபாரம் செய்றமோ அதே மாதிரி 3 தலைமுறையா தொடர்ந்து நம்மகிட் ட மிட்டாய் வாங்கி சாப்பிடறவங்களுமம் இருக்காங்க” என்கிறார்.