Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கடின உழைப்பிருந்தால் ஜெயிக்கலாம்…..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வாழ்க்கையில எல்லாருக்குமே சொல்றதுக்குன்னு ஒரு சோகக்கதை இருக்கும். ஆனால் ஒரு சிலர்க்கு மட்டும் தான் தன்னோட வெற்றிக் கதையை சொல்ல வாய்ப்பு கிடைக்கும்….

அப்படி ஒரு மெக்கானிக்கா தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சி, இன்னைக்கு ஒரு பெரிய தொழிலதிபரரா வளர்ந்து இருப்பவர் தான் விஎஸ்டி பாபு என்றழைக்கப்படும் சந்திரபாபு.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பைபாஸில்  சங்கிலியாண்டபுரத்தில் இருக்கிறது அவருடைய ஷோரும்களான கவி பர்னிச்சர் மற்றும் கவி அக்ரோ ஏஜென்ஸி.

திருச்சியிலே இல்லாத அளவிற்கு 20 ஆயிரம் சதுரடியில் பிரமாண்டமாக பரந்து விரிந்திருக்கும்  கவி பர்னிச்சரில், மொத்தம் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதில் தரைத்தளத்தில் உள்ள 10 ஆயிரம் சதுர அடியில் கட்டில், பீரோ, டிரஸ்ஸிங்க டேபிள், டைனிங் டேபிள் போன்றவைகளும். முதல் தளத்தில் உள்ள  10 ஆயிரம் சதுர அடியில்வெறும் ஷோஃபாக்கள் மட்டும் விதவிதமான டிசைன்களில் இருக்கின்றன. இரண்டாவது தளத்தில் கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு பர்னிச்சர்கள் சொந்தமாக தயாரிக்கப்படுகின்றன.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இதுமட்டுமல்லாமல் கவி ஆக்ரோ ஏஜென்ஸிக்காக பவர் டில்லர் மெஷின்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள். அவற்றுக்கு தேவையான உதிரிபாகங்கள் என அதை ஒரு 10 ஆயிரம் சதுர அடிக்கு குவித்து வைத்து மலைக்க வைத்திருக்கிறார். கவி பர்னிச்சர் மற்றும் கவி அக்ரோ  ஏஜென்ஸியை நடத்திவரும் விஎஸ்டி பாபு என்றழைக்கப்படும் சந்திரபாபு.

விஎஸ்டி பாபு:      

என்னோட பெயர் சந்திரபாபு. வயசு 57 ஆகுது. திருச்சி  சின்னக்கடை தெரு தான் பூர்வீகம். அப்பா நாராயணன். அம்மா வீரம்மாள். நாங்க பாரம்பரியமா வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. எங்க அம்மா, அப்பா பெட்டிக்கடை, டீக்கடை தான் வச்சிருந்தாங்க. எனக்கு மொத்தம் அண்ணன், தம்பிங்கன்னு ஏழு பேர் அக்கா தங்கச்சின்னு ரெண்டு பேர். மொத்தம் எங்க வீட்டுல ஒன்பது பேர். கஷ்டப்பட்டு தான் எங்க அம்மா, அப்பா எல்லாத்தையும் வளர்த்தாங்க.

வீட்டுல எப்பவுமே கஞ்சி தான். வீட்டுல படுக்க கூட இடம் கிடையாது, தெருவுல தான் படுத்து துங்கவோம். எனக்கு படிப்பு அவ்வளவா ஏறலை.  7-வது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். அதுவரைக்கும் எப்படி படிச்சேன்னு எனக்கே தெரியலை. ஒரு கட்டத்துல எனக்கு படிப்பு வரலைன்னு, என்னோட அம்மா என்னை ஒரு லாரி பட்டறையில் வேலைக்கு சேர்த்து விட்டாங்க. அப்படியே டீ, காபி வாங்கி குடுத்துகிட்டு தொழில் கத்துக்கிட்டேன். இப்போ, நான் ஓரளவுக்கு பிசினஸ் செஞ்சி நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். கல்யாணமாகி எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல வாழ்ககை நல்லா போய்க்கிட்டு இருக்கு என்று அவர் தெரிவித்தார்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

என்னை எல்லாரும் விஎஸ்டி பாபுன்னு கூப்பிட காரணம், 1979-ல் மோட்டார்ஸில் வேலைக்கு சேர்ந்தேன். 6 மாசமா சம்பளமே இல்லை. 6 மாசத்துக்கு அப்புறமா 35 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்படியே 1980-ல் மாசம் 200 ரூபாய் சம்பளம் கிடைச்சது. 18984  டைம்ல பவர் டில்லர் செக்ச்ன்ல வேலை பார்க்க சொன்னாங்க. அப்போ, பவர் டில்லர் மெஷினை வயலுக்கு எடுத்துட்டு போய் அதை டேமோ செஞ்சு காட்டி சேல்ஸ் பண்ணுவேன். கிட்டதட்ட 1991 வரைக்கும் வேலை பார்த்தேன். நான் விஎஸ்டி மோட்டார்ஸ்ல வேலை பார்த்ததால தான் விஎஸ்டி பாபுன்னு கூப்பிடுறாங்க.

கவி பவர் டில்லர்:

அந்த டைம்ல ரெடிமேட் துணிக்கு மக்கள் கிட்ட அததிகமான மவுசு  இருந்துச்சு. அப்போ, என்னோட நண்பர் ஒருத்தர் கொடுத்த யோசனையால பாம்பே-க்கு போய் துணி வாங்கிட்டு வந்து தைச்சி வித்தோம். அது சரியா ஒர்க்கவுட் ஆகலை, அதுல கிட்டதத்தட்டட 40 ஆயிரம் வரை நஷ்டமாயிடுச்சி.    அதுக்கப்புறமா தான், விஎஸ்டி-ல வேலை பார்த்த அனுபவத்துல பவர் டில்லர்க்கு சர்வீஸ் சென்டர் வச்சேன். இரவு பகல் பார்க்காமல் நான் செஞ்ச கடின உழைப்பால் சில வருடங்களிலேயே கவி பவர் டில்லர்ன்னு என்னோட மகள் பெயரில் பல டில்லர் மெஷினை வெளிநாடுகள்ல இருந்து தயார் செஞ்சு இங்க டீலர் புடிச்சி விற்க ஆரம்பிச்சேன். அப்படி தான் என்னோட வளர்சசி ஆரம்பமானது.

 கவி பர்னிச்சர்:

பவர் டில்லர்  டீலர் விஷயமா சீனா போன சமயத்துல தான் அங்க பர்னிச்சர் மேலே கவனம் வந்துச்சி. எக்கச்சக்கமான பர்னிச்சர்கள் விதவிதமான டிசைன்கள்ல இருந்துச்சி. ஒரு கண்டெய்னர்ல பர்னிச்சர் இறக்கி பார்ப்போம்னு செஞ்சேன். அதுக்கு நல்ல வலவேற்பு இருந்துச்சி. அப்படியே தொடர்ந்து செய்ய போகத் தான் இன்னைக்கு கவி பர்னிச்சர் இப்படி வளர்ந்து நிக்குது. 2014-ல் பர்னிச்சரை இறக்கி பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் வியாபாரம் சிறப்பா போய்க்கிட்டு இருக்கு. இன்னைக்கு என்கிட்ட கிட்டத்தட்ட 40 பேர் வேலை பாக்குறாங்க.

சீனான்னு சொன்னாலே டியூப்ளிகேட்ன்னு ஒரு பிம்பம் இங்க உருவாகிடுச்சி. அங்க பைசாவுக்கு ஏத்த மாதிரி நல்ல தரமான பொருளும் கிடைக்குது. நான் எப்பவுமே எனக்கு பிடிச்சிருந்தா, தரமானதா இருந்தா மட்டும் தான் ஆர்டர் போட்டு வைரவலைப்பேன். அப்படி எனக்கு ஆரம்பத்துல வந்த ஷோஃபாக்கள் கொஞ்சம் குவாலிட்டி கம்மியா இருந்துச்சி. இப்போ, நானே ஷோஃபா, மரக்கட்டில், டைனிங் டேபிள்,  டிரஸ்ஸிங்க் டேபிள்ன்னு சொந்தமாக செய்ய ஆரம்பிச்சிட்டோம். ஆர்டர் கொடுக்குறவங்களுங்க்கு பிடிச்ச டிசைன். அளவுகளிலும் செஞ்சு தருகிறோம். மற்ற போருள் எல்லாம் வெளியில இருந்து வாங்குறோம். எங்ககிட்ட வாங்குற பர்னிச்சர்களுக்கு சர்வீஸீம் செஞ்சு தருகிறோம். அதனால் எங்களை தேடி நிறைய பேர் வர்றாங்க.kav1

நான் சின்ன வயசுலயே பீச்ல சுண்டல் வித்தாலும் பரவாயில்லை. ஆனா சொந்தமாகத் தான் பிசினஸ் செய்யணும்னு நெனச்சேன். ஆனா, இன்னைக்கு நான் எரிர்பார்க்காத அளவுக்கு எனக்கு எல்லாம் அமைஞ்சிருக்கு. என் மனைவியோட  அக்கா பையன் அருள் தான் முழுக்க என் கூட   இருந்து பிசினஸ்க்கு  உதவி  செய்கிறார். அதுமட்டுமில்லாமல் குடும்பத்துல மனைவி மற்றும் மகள்களோட சப்போர்ட், கொஞ்சம் கடின உழைப்பு இருந்தா வாழ்க்சைகயில் எல்லாம் நல்லபடியா கிடைக்கும்கிறது தான் திரும்பி பார்க்கையில் தோணுது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.