கடந்த 15.05.2025 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் இணைய வழி காவல் நிலையத்திற்கு வந்து அல்கோ டிரேடிங் என்ற நிறுவனத்தை இணையவழி மூலமாக பார்த்து பங்குச்சந்தையில் தானியங்கி முறையில் பங்குகளை வாங்கி விற்கின்ற செயலி சாஃப்ட்வேர் எங்களிடம் உள்ளது நீங்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினால் இணைய வழி மூலமாகவே அந்த செயலியை உங்களுக்கு அனுப்பி வைப்போம் என கூறியிருக்கிறார்கள்.
மேலும் அது எவ்வாறு செயல்படுகிறது என்று செயல் விளக்கமும் கொடுக்கப்படும் அதை உங்கள் செல்போனிலேயே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வந்த விளம்பரத்தை நம்பி அல்கோ டிரேடிங் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.
முதலில் பத்தாயிரம் ரூபாயும் பிறகு 20000 ரூபாயும் கடைசி கட்டமாக 10,000 ரூபாயையும் மொத்தமாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்திய பிறகு அந்த நிறுவனத்திலிருந்து எந்த செயல்முறை விளக்கமோ மென்பொருளோ அவர்களிடம் இருந்து வரவில்லை. மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே அல்கோ ட்ரேடிங் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுத்து என்னுடைய பணம் திரும்பி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நார சைதன்ய ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரிலும் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து குற்ற எண் 23/ 2015 தலைமை காவலர் அருண் உதவி உடன் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
மேற்கண்ட வழக்கில் விசாரணை மேற்கொண்டதில் அல்கோ டிரேடிங் என்ற நிறுவனம் சென்னை வேளச்சேரி மற்றும் நந்தனம் பகுதியில் இயங்குகிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். பல்வேறு இணைய வழி தரவுகளின் மூலம் நிறுவனத்தை கண்காணித்த போது இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் அந்நிறுவனத்தின் மீது பதிவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
தேசிய இணைய வழி குற்றப்பதிவு முனையம் (NCRP) விசாரணை மேற்கொண்டதில் அவர்களுடைய மென்பொருள் 40 ஆயிரம் ரூபாய் என்றும் பல்வேறு நபர்களை வைத்து அல்லது அவர்களுடைய வெப்சைட்டை யார் யாரெல்லாம் பார்க்கிறார்களோ அவர்களை தொடர்பு கொண்டு மேற்படி நிறுவனத்தின் மென்பொருளை பற்றி விளக்கி மென்பொருள் தருகிறோம் என்று நம்ப வைத்து இந்த மென்பொருளை பயன்படுத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு 3000 முதல் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று சொல்லி பணத்தை செலுத்திய பிறகு மென்பொருளை அனுப்பாமல் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு நபர்களிடமும் வசூலித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கி மேற்படி உரிமையாளரின் இருப்பிடம் தெரிய வந்ததால், காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் கீர்த்தி தலைமை காவலர்கள் அருண் ரோஸ்லின் மேரி இருசவேல் வினோத் கமலி மேரி கிறிஸ்டினா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து நேற்று காலை சென்னை வேளச்சேரி பகுதியில் இயங்கி வந்த அல்கோ டிரேடிங் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதன் உரிமையாளர் அஸ்வின் குமார் வயது 32 என்பவர் கைது செய்யப்பட்டு மேற்படி நிறுவனத்தில் சோதனை மேற்கண்ட போது மோசடிக்கு உபயோகப்படுத்திய 14 லேப்டாப்கள் ஆறு செல்போன்கள் ஒரு சொகுசு கார் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இணைய வழியில் உபயோகப்படுத்தக்கூடிய பல்வேறு உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேற்படி இந்த மோசடிக்காக அவருடைய வங்கி கணக்கு மற்றும் மனைவி வங்கி கணக்கு நண்பர்களின் வங்கிக் கணக்கை மோசடி செய்த பணத்தைப் பெற உபயோகப்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேற்படி வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதாகவும், புதுச்சேரியில் மட்டும் இந்த நிறுவனத்தின் மீது ஏழு புகார்கள் உள்ளது என்றும், மேலும் இந்த வழக்கில் நிறுவனத்தில் பணிபுரிந்த நபர்கள் வங்கி கணக்கை கொடுத்து உதவிய நபர்களையும் கைது செய்ய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தெரிவிப்பது என்னவென்றால் நாளுக்கு நாள் புதிய புதிய முறையில் இணைய வழி மோசடிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றது இணைய வழியை நம்பி வருகின்ற வேலை வாய்ப்பு, முதலீடு டிஜிட்டல் அரஸ்ட், வீட்டில் இருந்தே வேலை பங்குச் சந்தையில் முதலீடு, குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம் போன்ற எதையுமே நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா, கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாத ஐந்து மாதங்களில் 1172 இணைய வழி மோசடி புகார்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் பொது மக்களுக்கு மேலே சொன்ன எந்த ஒரு சந்தேகம் இருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணம் செலுத்துவதற்கு முன்பு தங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 அழைப்புகள் தற்போது 1930 என்ற இலவச எண்ணிற்கு வருவதாகவும், பொதுமக்கள் இந்த எண்ணை பயன்படுத்தி பண இழப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.