Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உங்களுக்கு தெரியாமல் கிரெடிட் கார்டிலிருந்து பணம் கழிக்கப்படுகிறதா?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

SMS அலெர்ட், ஈமெயில், ஸ்டேட்மென்ட், ஸ்கிரீன்ஷாட்கள், FIR காபிகள் மற்றும் பேங்க் கரெஸ்பாண்டென்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

News18
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருவதால், கிரெடிட் கார்டு மோசடியும் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் இதுபோன்ற மோசடிகளைச் செய்வதால், அவர்களைப் பிடித்து பணத்தை மீட்பதும் கடினமாகிறது.
எனவே பலருக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், அல்லது தங்கள் பணத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு இதற்கான சரியான செயல்முறையைப் பற்றி முழுமையாகத் தெரியாது.
இதுபோன்ற சூழ்நிலைகளில், உடனடியாக உங்கள் வங்கி அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உடனடி நடவடிக்கை உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.
சில நேரங்களில், நமக்குத் தெரியாத பரிவர்த்தனைகளைக் கண்டறிவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் பீதியடையாமல் உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுத்தால், உங்கள் பணத்தின் பெரும்பகுதியைத் திரும்பப் பெறலாம். கிரெடிட் கார்டு மோசடி சமீபத்தில் அதிகரித்து வருவதால், சரியான நடைமுறையைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.
உங்கள் கார்டை உடனடியாக பிளாக் செய்யுங்கள்:

உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை உங்கள் கார்டை பிளாக் செய்வதாகும். இது மேலும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கிறது. பெரும்பாலான வங்கிகள் தங்கள் மொபைல் ஆப், நெட் பேங்கிங் அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு உதவி எண் மூலம் இதைச் செய்யலாம். இந்த சேவைகள் 24 மணி நேரமும் ஆன்லைனில் கிடைக்கும். எனவே நீங்கள் எந்த நேரத்திலும் கார்டை பிளாக் செய்யலாம். உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து உங்களுக்குத் தெரியாத பரிவர்த்தனைகள் செய்யப்படுவதைத் தடுக்க இது பயனுள்ளதாக இருக்கும்.
வங்கியில் புகார் அளிக்கவும்:

கார்டை பிளாக் செய்தாலும், உங்கள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகாரை அளிக்கவும். உங்களுக்குத் தெரியாத பரிவர்த்தனை நடந்திருப்பதை தெளிவாக அடையாளம் காணும் வகையில், வங்கியின் வலைத்தளம், ஆப் அல்லது ஈமெயில் வழியாக ஒரு டிஸ்ப்யூட் ஃபார்மை சப்மிட் செய்யவும். இந்தப் ஃபார்மில் தேதி, நேரம், தொகை மற்றும் பெயர் போன்ற அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். நீங்கள் விவரங்களை வழங்கியவுடன், வங்கி விசாரணை நடத்தும். பரிவர்த்தனையில் மோசடி நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டால், உங்கள் பணமானது 7 முதல் 90 நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும்.
மோசடி குறித்து அனைத்து இடங்களிலும் புகாரளிக்கவும்:

வங்கியில் மட்டும் புகார் அளிப்பது போதாது. உங்கள் புகாரை விரைவாக தீர்க்க வங்கியின் வாடிக்கையாளர் சேவை, ஆன்லைன் டிஸ்ப்யூட் ஃபாரம், ரிசர்வ் வங்கியின் சகால் போர்டல் மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளிக்கவும். இது போன்ற புகாரைப் பதிவு செய்வது வேலையை விரைவாக முடிக்க உதவும். ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, மோசடி செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு, முழு பணத்தையும் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
மோசடி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வைத்துக் கொள்ளவும்:

SMS அலெர்ட், ஈமெயில், ஸ்டேட்மென்ட், ஸ்கிரீன்ஷாட்கள், FIR காபிகள் மற்றும் பேங்க் கரெஸ்பாண்டென்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். உங்கள் பணத்தை மீட்டெடுக்க இந்த ஆவணங்கள் அவசியம் என்பதால், அவற்றை சிங்கிள் ஃபோல்டரில் PDF ஃபார்மெட்டில் சேமிக்கவும். இந்த ஆவணங்கள் உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த ஆவணங்களாகும்.
மோசடியைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள்:

மோசடி நடந்த பிறகு தேவையான நடவடிக்கையை எடுப்பதை விட, அது நடப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முக்கியமாக உங்கள் OTP-ஐ யாருடனும் பகிர வேண்டாம், மேலும் சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்களில் கார்டு விவரங்களை என்டர் செய்வதைத் தவிர்க்கவும், ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை இயக்கவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு விர்சுவல் கார்டை பயன்படுத்தவும். இந்த வழிகளானது உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.