Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அதிரடியாக 6000 பேரை வேலையை விட்டு தூக்க தயாரான முன்னணி நிறுவனம் !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலக அளவில் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த பணிநீக்கத்தால் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் அதிகமானோரை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த பணிநீக்கம் LinkedIn ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும்   தெரிவித்திருக்கிறார்கள்.

பணிநீக்கத்திற்கான முக்கிய காரணமாக அதிகரித்து வரும் சந்தை போட்டித்தன்மை, செலவுகள் இதையெல்லாம் குறைக்க ஊழியர்கள் பணிநீக்கத்தை விட்டால் வேறு ஆஃப்சன் இல்லை என அந்நிறுவனத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.microsoft

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதமும் உலக அளவில் சுமார் 228,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதற்குமுன் 2023 ஜனவரி மாதம் சுமார் 10,000 ஊழியர்களை ஹோலோலென்ஸ், அதன் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் பிற வன்பொருள் பிரிவுகளில் பணிபுரியும் குழுக்களைச் சேர்ந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்.

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் கிளவுட் சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் Azure மற்றும் AI-இயக்கப்படும் சலுகைகளை ஆதரிப்பதற்காக தரவு மையங்களில் சுமார் 80 பில்லியன் டாலர் செலவிட அதிகமாகும்  என தெரிவித்திருக்கிறார்கள்.

 

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி உலகின் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.இந்த ஆண்டின் தொடக்கத்தில், செயல்திறன் தொடர்பான வெளியேற்றங்கள் மூலம் தனது பணியாளர்களை ஐந்து சதவீதம் குறைப்பதாக மெட்டா கூறியது, அதே நேரத்தில் சேல்ஸ்ஃபோர்ஸ் புதிய AI சார்ந்த பணிகளை நோக்கிச் செல்ல 1,000 க்கும் மேற்பட்ட பதவிகளை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.