திருச்சியில் புதிய இ.எஸ்.ஐ மருந்தக கிளைகள் திறப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் புதிய கிளைகளை நேற்று 01.10.2022 பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூரில் திருச்சி மண்டல நிர்வாக அலுவலர், மருத்துவர் S. பாரதி திறந்து வைத்து சிறப்பித்தார். இப்பகுதியில் உள்ள ஈட்டு உறுதி தொழிலாளர்கள் மருந்தகங்களில் பதிவு செய்து, தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.