மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும் – நம்மைக் காக்கும் 48, புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர், கலைஞரின் கனவு இல்லம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் கடைக்கோடியில் வாழக்கூடிய நபர்களுக்கும் சென்றடையும் வண்ணம் செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இவ்வரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும் திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 30.12.2021 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது
தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் தரைத்தளத்தில் 124 பேருந்துகள், நீண்ட நேர நிறுத்த பேருந்துகள் 141, குறைந்த நேர நிறுத்த பேருந்துகள் 80 என 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளுர் நகரப் பேருந்துகளும், என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காக பேருந்து முனையத்தின் தரைதளம் முற்றிலும் குளிரூட்டும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. காற்றுமாசினை கட்டுப்படுத்தி குளிர்ந்த சூழலை ஏற்படுத்தும் வகையில், பேருந்து முனையத்தைச் சுற்றிலும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து முனையம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பேருந்து முனையத்தை பற்றி பொதுமக்களின் கருத்து:
வணக்கம், எனது பெயர் ரீனா, நான் இந்த பேருந்து நிலையத்தை கண்டதும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த பேருந்து முனையத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மிகவும் நவீனமயமாக உள்ளதாகவும், இந்தியாவிலேயே இதுபோன்ற பஸ் முனையத்தை பார்க்க முடியாது என்றும் சாதாரண மக்களையும் நவ, நாகரிக உலகத்துக்கு அழைத்து செல்கிறது மேலும் ஆட்சியாளர்கள் கூறுவது போன்று “எல்லோர்க்கும் எல்லாமும்” என்ற கனவு நினைவாகி வருகிறது என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் ஒரு சல்யூட் மற்றும் எனது மனமார்ந்த நன்றியை நிறைந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
எனது பெயர் குமார். நான் பேருந்து முனையத்தை கண்டவுடன் அதில் உள்ள வசதிகளும், பல்வேறு சிறப்பம்சங்களும் என்னை மிகவும் வியப்படைய வைத்தது இது போன்ற சிறப்பான பேருந்து நிலையத்தை நான் எங்கும் கண்டதில்லை என்றும் அதிக அளவு பேருந்துகள் நிற்பதற்கு பெரும் வசதியாக உள்ளது. மேலும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டதாக இருப்பதாகவும் இதுபோன்ற சிறப்பான பேருந்து முனையத்தை கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அவரது அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த நன்றி என அவர் தெரிவித்திருக்கிறார்.
எனது பெயர் மோகனப்பிரியா, நான் தற்போது பஞ்சப்பூர் ஒருங்கினைந்த பேருந்து முனையத்திற்கு வந்தேன். பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும் அதிக பரப்பளவு கொண்டதாகவும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு பஸ் நிலையம் நம் ஊரில் இருப்பது பெருமையாக இருப்பதாகவும் மிகவும் அவர் கூறியிருக்கிறார். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. இந்த பேருந்து முனையம் திருச்சிராப்பள்ளி பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிறப்பான பேருந்து முனையத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என அவர் தெரிவித்திருக்கிறார்.