‘அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தாலும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்’என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவியது. இதனால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தில் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம்-மிடம் கூறியிருக்கிறார். தற்போது இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிபர் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்க கூடாது.
மேலும் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம்-மிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தேன்.
அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.