Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வாழை விவசாயத்தில் கொட்டும் லாபம்.. நவீன தொழில்நுட்பத்துடன் வாழை விவசாயம் செய்ய விருப்பமா..?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வாழை விவசாயத்தில் கொட்டும் லாபம்.. நவீன தொழில்நுட்பத்துடன்
வாழை விவசாயம் செய்ய விருப்பமா..?

உலக அளவில் வாழை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது . “இந்தியாவில் 8 லட்சம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. 30 மில்லியன் மெட்ரிக் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 63 ஆயிரம் மெட்ரிக் டன் வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு 5.70 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Agricultural Research-ICAR) வழிகாட்டுதலின்படி தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது National Research Centre for Banana, Trichy) 1993-ஆம் ஆண்டு தமிழகத்தில், திருச்சியில் நிறுவப்பட்டது.

இம்மையத்தில் (National Research Centre for Banana, Trichy) வாழை ரகங்கள் மேம்பாடு (Crop Improvement), வாழை உற்பத்தியை Crop Production) அதிகரித்தல், அறுவடை பின் வாழை நிர்வாகம் (Post Harvest Management), வாழை பாதுகாப்பு (Crop Protection) என்ற அடிப்படையில் ஆராய்ச்சிகள் (Research) நடைப்பெற்று வருகின்றன.
இம்மையத்தின் மூலம் வாழை விவசாயிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

வாழை உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது, வாழையை பயிரிடு வதற்கு நிலத்தை தயார் செய்தல், வாழை பயிரிடும் முறை, லாப நோக்கமுள்ள வாழை இரகங்களை தேர்தெடுக்கும் முறைகள், தரமான வாழைக் கன்றுகளை தேர்தெடுதல், வாழையை நோய்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி, தரமான வாழை பழங்களை உற்பத்தி செய்தல், இயற்கை சீற்றங்களிலிருந்து வாழையை பாதுகாத்தல், நீர் பாசன முறை, ஒவ்வொரு மாதமும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள், உரமிடுதல், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் கூடுதல் உற்பத்தி, இலாபம் ஈட்டும் சந்தை வாய்ப்புகள், அறுவடை பின் வாழை நிர்வாகம், அறுவடைக்கு பின்னர் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் முறைகள், மேம்பட்ட சேமிப்பு வசதிகள், வாழை உற்பத்திக்கு தேவையான தொழில் நுட்பங்கள் போன்ற எண்ணற்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

அத்துடன் வாழை சம்பந்தமான பயிற்சிகளும் வழங்கப் பட்டு வருகிறது. வாழையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்க ளைத் தயாரித்தல், அறுவடை பின் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள்,வாழையில் மேம்படுத்தப்பட்ட வாழை உற்பத்தி, தரமான வாழைப் பழங்களை ஏற்றுமதி போன்ற அடிப்படையில் பல பயிற்சிகளை வழங்குகிறது.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாழை விவசாயத்தில் ஈடுபட விரும்புபவர்கள் திருச்சி, சோமரசம்பேட்டை-தாயனூர் சாலையில் இம்மையத்தை அணுகலாம்.

 

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சார்ந்த பயிற்சிகள்
– வாழைப்பழ சாற்றை தெளிவுபடுத்துதல்
– தண்டில் இருந்து ஜூஸ்
– வாழை மாவுத் தயாரித்தல்
– வாழைக்காய் சிப்ஸ்
– வாழைப்பழ சிப்ஸ்
– வாழைப்பழகூழ்
– வாழைப்பழ சாறு உடனடியாக பரிமாறும் பானம்
– வாழைப்பழ பார்
– வாழைப்பழ பிஸ்கட்
– வாழை ஜெல்லி
– வாழைப்பழ ஜாம், ஊறுகாய்
– வாழை நார் கழிவில் இருந்து மண்புழு உரம்
– வாழைபட்டையில் இருந்து வாழை நார் பிரித்தெடுத்தல் மற்றும் – – – – -கை வினைப்பொருட்கள் தயாரித்தல்
-வாழைப் பழங்களை உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்காக அறுவடைக்குப்பின் கையாளுதல், சேமித்துவைத்தல், பழுக்க வைத்தல், பேக்கேஜின் செய்தல் போன்ற பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.