Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அலுவலக பணி நேர மாற்றம் : பள்ளிக்கல்வித்துறை எடுத்த முடிவு !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்ததாகவும் இந்த சூழலில் கடந்த 2023 ம் ஆண்டு மே மாதம் அமைச்சு பணியாளர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை  என மாற்றி அமைத்து உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், பல்வேறு சங்கங்கள் அமைச்சு பணியாளர்களின் பணி நேர மாற்றம் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.Education

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களின் பணி நேரம் மீண்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல, பணிநேரத்திற்கு பிறகு, வழக்கமான பணிகள் இல்லாமல், முக்கிய மற்றும் அவசர பணிகள் இருக்கும்போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் முறைப்பணிக்கு வரிசையாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்களை அலுவலகம் வரும்படி அலுவலக தலைவர்கள நடவடிக்கை மேற்கொளள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.