இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருவதால், கிரெடிட் கார்டு மோசடியும் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் இதுபோன்ற மோசடிகளைச் செய்வதால், அவர்களைப் பிடித்து பணத்தை மீட்பதும் கடினமாகிறது.
கிரெடிட் கார்டுகளை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் பயன்படுத்துவதால், எதிர்பாராத கடன் அபராதங்கள் மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.