நமது திருச்சி தொழில் முனைவோர்களில் மிக அதிகமான நண்பர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய சுங்கச்சாவடியாக உள்ளது வாழவந்தான் கோட்டை, அச்சாவடி திருச்சி தஞ்சாவூர் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.
அந்த சுங்கச்சாவடிக்கான கட்டணம் இந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 01.04.2025 அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அந்த சுங்கச்சாவடியில்
(0 – 10 )கிலோமீட்டர் மாத கட்டணமாக இருந்தது ரூபாய் 150
10.01 முதல் 20 கிலோமீட்டர் காண கட்டணம் ரூபாய் 300/=
இந்த கட்டணம் தற்பொழுது ஒரே கட்டணமாக ( 0 – 20) கிலோமீட்டர் வரை ரூ 350 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வாகனங்களுக்கான அனைத்து தொகைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமாக கனரக வாகனங்களுக்கு மிக அதிகமான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நாம் நமது கோரிக்கையை வைத்ததுடன் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை இயக்குனர் அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி உள்ளோம்.
ஏற்கனவே மாத கட்டணத்தில் உள்ள நண்பர்கள் புதுப்பிப்பதற்காக சுங்கச்சாவடியில் செல்லும் போது வாகன உரிமை ஆதார் எண் புகைப்படம் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கேட்டு அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவ்வாறு கேட்கக் கூடாது ஏற்கனவே உள்ள தரவுகளை வைத்து புதுப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து தேசிய நெடுஞ்சாலை இயக்குனர் அவர்களும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியில் பேசுவதாக கூறியிருக்கிறார்
Trailer போன்ற கனரக வாகனங்கள் இயக்கக்கூடிய நிறுவனங்களில் தொகை சம்பந்தமாகவோ அல்லது இந்த கட்டண உயர்வு இந்த குறைபாடுகள் சம்பந்தமாக ஏதாவது நாம் தேசிய நெடுஞ்சாலையில் பேச வேண்டியிருந்தால் அந்த தகவல்களை நமது சங்கத்திற்கு இமெயில் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
நன்றி,
முகில் பே. ராஜப்பா.,
(திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர்)