Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

என்ன கொடுமை சார் இது ? மாசம் 80,000 டோல் மட்டும் கட்ட முடியுமா?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனியார் பேருந்துகளுக்கான மாதாந்திர கட்டணத்தை உயர்த்தியதற்கும், பயணங்களின் எண்ணிக்கையை குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

திருச்சி-தஞ்சாவூர் இடையே 25 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்தும் தினமும் குறைந்தது 8 முறை சென்று வருகிறது. பேருந்து உரிமையாளர்கள் துவாக்குடி சுங்கச்சாவடியை பயன்படுத்த ஒரு பேருந்துக்கு மாதம் 8,045 ரூபாய் செலுத்தி வந்தனர். NHAI (கட்டண விதிமுறைகள்) 1997-ன் படி, பேருந்துகள் வரம்பின்றி சுங்கச்சாவடியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் முதல், NHAI கட்டண விதிமுறைகள் திருத்தம் 2008-ன் படி, NHAI விதிகளில் மாற்றம் செய்திருக்கிறார்கள். மாதாந்திர கட்டணம் 10,495 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் மேலும், பேருந்துகள் மாதத்திற்கு 50 முறை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். தர்மராஜன் கூறுகையில், “மாதாந்திர கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் பேருந்துகள் மாதம் சுமார் 360 முறை பயணிக்கின்றன, எனவே நாங்கள் மாதம் சுமார் 80,000 ரூபாய் சுங்க கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

கட்டண விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும், ஒரு பாஸ் மூலம் அனுமதிக்கப்பட்ட பயணங்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்ய முடியாது என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.toll plazza

இவ்வாறு இருக்கும் நிலையில் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனியார் பேருந்துகளுக்கான மாதாந்திர கட்டணத்தை உயர்த்தியதற்கும், பயணங்களின் எண்ணிக்கையை குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

போராட்டத்தை தொடர்ந்து, துவாக்குடி போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் திட்ட அமலாக்கப் பிரிவு (PIU) தலையிட்டு பிரச்னையை தீர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் பொருந்தும், நாங்கள் விதிகளை மாற்ற முடியாது. பேருந்து உரிமையாளர்கள் சுங்கச்சாவடியில் வரம்பின்றி நுழைவதற்கு கட்டணம் செலுத்த தயாராக இல்லை.” இவ்வாறு  கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி மாவட்டத்தில் இருந்து இந்த தனியார் பேருந்துகளை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான பயணிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.