பிளஸ் 2 மாணவர்கள் உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பான உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால தமிழ்முதுகலைப் பட்டப்படிப்பு ( Five years integrated Post Graduate M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான பட்டத்தை தஞ்சை தடமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த படிப்பில் வரும் கல்வியாண்டிற்கான (2025-2026) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தையும் விளக்கவுரையையும் www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது நேரிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்டையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த கல்வி நிறுவத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி இலவச விடுதி வசதி உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து இயக்குநர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி சென்னை- 600 113 என்ற முகவரியில் ஜீன் 16-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் கூடுதல் தகவல்களுக்கு 044-2254992 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.