Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2022, மார்ச் 31 வரை பதியலாம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

2022, மார்ச் 31 வரை பதியலாம்..!

கொரோனாவால் பாதிப்படைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் ஒன்று ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இத்திட்டத்தின்கீழ், 2020 அக்டோபர் 1ஆம் தேதிமுதல் 2021 ஜூன் 30ஆம் தேதி வரை நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், 1000 பேர் வரை வேலை பார்க்கும் நிறுவனத்தில் புதிய ஊழியர்களுக்கான சம்பளத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் 24 சதவீத பங்களிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மத்திய அரசு 2 ஆண்டுகளுக்குச் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் தற்போது 2022 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இது வரை பதிவு செய்யாத மற்றும் புதிய ஊழியர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதனால் பிஎஃப் அமைப்புடன் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் புதிதாக வேலையில் சேரும் தொழிலாளர்களுக்கும், அவர்களை வேலையில் சேர்க்கும் நிறுவனங்களுக்கும் அரசின் சலுகை கிடைக்கும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.