தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்தத 10-ம் வகுப்பு மறும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 5-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடந்தது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7557 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 (இதில் 4755 தனித் தேர்வர்கள் மற்றும் 137 சிறைவாசிகளும்) மாணவ மாணவிகள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். மேலும் 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடந்தது , அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.

பிளஸ் 1 மற்றும் 10 ம் வகுப்பு மே 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 3 நாள் முன்னதாகவே நாளை காலை (16-ம் தேதி) முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் பிளஸ் 1 மற்றும் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 16-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை கல்லுரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என தெரிவித்திருக்கிறார்கள்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள https://results.digilocker.gov.nic.in & www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவ மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள். மேலும் மாணவ மாணவியகளுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.