2021 ஜனவரி 15- முதல் தொலைபேசியில் ‘0’ அழுத்த வேண்டும்
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு தொலை தொடர்புத் துறை புதிய முடிவொன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி தொலைபேசியிலிருந்து (land line) அலைபேசி எண்ணிற்கு அழைக்கும் போது தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை அழுத்துவதற்கு முன்னர் தொலைபேசியில் பூஜ்ஜியத்தை அழுத்தி, அழைக்க வேண்டும். போதுமான எண் வளங்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும் விதமாகவே இம்முடிவை தொலைபேசி துறை எடுத்துள்ளது.
தகுதியோடு இருந்தால் தேவை வரும் போது
உரியவர்களால் தேடப்படுவாய் என்பதே சத்தியம்.