Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீடு,மனை வாங்கப் போறீங்களா? கொஞ்சம் இதைப் படிங்க….

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தின இதழ்களில், தொலைக்காட்சிகளில் ரியல் எஸ்டேட் குறித்த விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து ஏதாவது ஒரு இடத்தை வாங்கிப் போட வேண்டும் என்றோ, புதிதாக வீடு கட்டிச் செல்ல வேண்டும் என்றோ திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் தான் அவர்களின் இலக்கு..!

வாங்கப் போகும் இடத்தின் அருகில் மருத்துவமனை, கோவில், பேருந்து வசதி, குடிநீர் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாக குறிப்பிடுவார்கள். அவர்கள் உங்களை அழைத்துச் செல்லும் போது அவர்கள் வாகனங்களில் செல்வீர்கள். ஆனால் நீங்கள் அங்கே குடி அமர்ந்த பின்பு போது பல நேரங்களில் பேருந்துகளில் சென்று வர வேண்டியிருக்கும். அப்படியானவர்கள் பேருந்து போக்குவரத்து குறித்தும், மருத்துவ வசதி குறித்தும் களஆய்வு செய்தே இடத்தை வாங்க முற்பட வேண்டும்.

அதெல்லாம் சரி.. இவையெல்லாம் மேலோட்டமாக தெரியும் விஷயங்கள். குறிப்பாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

முதலில் நீங்கள் வீட்டுமனை வாங்க தீர்மானித்துள்ள லே அவுட் மாநகர பகுதியாக இருக்கும் பட்சத்தில் பெருநகர் வளர்ச்சி குழுமத்தாலோ, நகரசபைகளாக இருக்கும் பட்சத்தில் நகர வளர்ச்சி குழுமத்தாலோ முறைப்படி பதிவு செய்து, அனுமதி வழங்கப்பட்டுள்ள லே-அவுட்டா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நீங்கள் வாங்கப் போகும் வீடு அல்லது மனை இருக்கும் இடம், அரசு கையகப்படுத்துவதற்கான ஏற்பாட்டில் உள்ள நிலமா அல்லது ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலமா என்பது விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் வீடு, நிலம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

வாங்கப் போகும்  வீடு அல்லது வீட்டுமனை தொடர்பாக ஏதவாது வழக்கு காவல் நிலையத்திலோ நீதிமன்றத்திலோ பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள லே அவுட்டாக இருக்கும் பட்சத்தில், பெருநகர அல்லது நகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற்றுள்ளனவா..? முறைப்படி பெற்றுள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியாகவுள்ளதா..? நிலம் பதிவு செய்ததற்கான முறைப்படி செலுத்த வேண்டிய வரி, கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாஎன்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்கும் அசையா சொத்துக்கு உண்மையான உரிமையாளர் யார்? அல்லது நிலத்திற்கான உரிமையை சட்டப்படி பெற்றுள்ள நபர் யார் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஒவ்வொரு சொத்துக்கும் மூல பத்திரம் மிகவும் அவசியமாகும். நீங்கள் வாங்கும் சொத்து பெரியளவில் இருந்தால், தற்போதைய உரிமையாளருக்கு அது எப்படி கிடைத்தது. அந்த சொத்தை விற்பனை செய்தவர் அல்லது தானமாக வழங்கியவர், உயில் மூலம் எழுதி கொடுத்தவர் யார்? அவருக்கு அந்த அதிகாரம் வழங்கியது யார்? அவருக்கும், நிலத்தின் மூல உரிமையாளருக்கும் உள்ள ரத்த சம்மந்தமான உறவு முறை என்ன? அவர் தாய்வழி உறவினரா? அல்லது தந்தை வழி உறவினரா? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு சொந்தமான நிலம் வேறு சாதியினருக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அப்படி அந்த வகுப்பினருக்கு சொந்தமான நிலம் வாங்கி லே-அவுட் போடப்பட்டுள்ளதா? என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

நிலம் யாருக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து மாநகராட்சி, நகரசபை, பேரூராட்சி ஆகியவை வழங்கியுள்ள உரிமை பத்திரம் (அசல்) உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிலத்திற்கான உரிமை பத்திரத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பெற்றாலும், அதன் பத்திர பதிவு முழுவதும் வருவாய்துறை அமைச்சகத்திடம் உள்ளது. நிலம் தொடர்பாக முழு விவரங்களை வருவாய்துறை அல்லது அதன் கீழ் இயங்கிவரும் பதிவாளர் அலுவலகத்தில் பரிசீலனை செய்து, நிலம் உண்மையான உரிமையாளரின் பெயரில் உள்ளதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

பதிவாளர் அலுவலகத்தில் 12 முதல் 30 ஆண்டுகள் வரையிலான ஆவணங்கள் பெற முடியும். அதை முழுமையாக கேட்டு பெற்று பரிசீலித்து தீர்மானிக்க வேண்டும்.

சில ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விவசாய நிலத்தை பறிமாற்றம் செய்யாமல் லே அவுட் போட்டு விற்பனை செய்வார்கள். அது பிற்காலத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், வாங்கிய சொத்தை இழக்கும் நிலைக்கு கொண்டு போய்விடும்.

எனவே விவசாய நிலமெனில், கிரீன் பெல்ட் நிலத்தில் இருந்து குடியிருப்பு நிலமாக மாற்றியமைக்க முறைப்படி அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிலத்திற்கு உண்டான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய குறைந்தபட்சம் 10 ஆண்டு களுக்கான வரி கட்டண பில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

லே அவுட் அமைப்பதற்கு வாங்கியுள்ள நிலத்தின் அளவு, அது தொடர்பாக நகர உள்ளாட்சி அமைப்பு கொடுத்துள்ள அனுமதி பத்திரம், வீடுகள் கட்ட கொடுத்துள்ள தடையில்லா சான்றிதழ், குத்தகை உத்தரவாத பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.

சிலர் தங்களுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்து கொடுக்கும் அதிகாரத்தை தனி நபருக்கு வழங்குவார்கள். அப்படி வழங்க பவர் ஆப் அட்டார்னி எழுதி கொடுப்பார்கள். அதை வைத்து கொண்டு லே அவுட் அமைப்பது அல்லது தனி நிலம் விற்பனை செய்வார்கள். அப்படி பவர் ஆப் அட்டார்னி பெற்றுள்ள நபர், உண்மையில் நிலஉரிமையாளரிடம் பிஓஏ எழுதி வாங்கியுள்ளாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது நிலம் விற்பனை செய்வோர், நிலம் வாங்குவோர் அனைவரும் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம் படம் பிடிப்பதுடன், கம்ப்யூட்டர் உதவியுடன் கைநாட்டு வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர நிலம் அல்லது வீடு விற்பனை செய்வோர் குடும்ப தலைவர் முதல் சொத்தின் வாரிசுதாரர்கள் அனைவரும் விற்பனை பத்திரத்தில் கையெழுத்திடும் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நில மோசடி குறைந்து வருகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.