Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தோ்தெடுக்கப்படும்  தொழிலில் உற்பத்தி செய்யும் பொருள் / சேவையை நுகர்வோர் யார் என்பது முதலாவதாக அறியப்பட வேண்டும்.

இந்த தொழிலில் போட்டி எவ்வளவு இலாபகரமானதா, தொழில்நுட்பம் அடிக்கடி மாறக்கூடியதா, அதற்கு தேவையான உள்ளீட்டு பொருட்கள் சுலபமாக கிடைக்கிறதா, திறம்வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பார்களா என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணவும்.

எந்த மாநிலத்தில் எந்த ஊரில் தொடங்கினால் அரசு உரிமம் சுலபமாக கிடைக்கும்? தேவையான நிலம் நியாயமான /மலிவு விலையில் கிடைக்குமா, மின்சாரம் தண்ணீர் தங்குதடையின்றி கிடைக்குமா, பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்ல சாலை/போக்குவரத்து வசதிகள் உண்டா, கழிவுகளை அகற்ற வசதிகள் உண்டா, வரி விகிதங்கள் என்ன, தொழிலாளர்கள் தங்க வீடுகள் கிடைக்குமா  என்பன போன்ற தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும்.

அந்த மாநில மாவட்ட தொழில் மையத்தை அணுகி அரசு சலுகைகள் என்ன உதவிகள் என்ன என கலந்தாலோசிக்கவும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அந்த மாநிலத்தில் ஊழல்/கையூட்டு அதிகமிருப்பதால் தொழிலை பாதிக்கும் அதை கவனத்தில் கொள்ளவும்

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

நிஷிஜி வரி என்ன அரசு அறிக்கை சமர்ப்பிக்க சொல்லும் போது அரசின் செயலற்ற நடைமுறைகளுக்காக தொழில் முனைவோரான நீங்கள் செலவிட வேண்டிய தொகை எவ்வளவு? என்ற தகவல்களை திரட்டவும்.

அடுத்து திட்ட அறிக்கை எதிர்கால வரவு-செலவு மாதிரி அறிக்கை தயார் செய்யவும். எவ்வளவு முதலீடு கடன் தொகை எவ்வளவு எந்த வங்கி கடன் அளிக்க போகிறது என்ற தகவல்களை முடிவு செய்யவும்.

ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் தாக்குப்பிடிக்கும் திறன் உண்டா என்பதை தீர்மானிக்கவும்.

தனிநபர் வணிகமா, கூட்டுவர்த்தகமா, கம்பெனியா என உங்களுக்கேற்ற அமைப்பை இறுதி செய்யவும்.

இந்த வணிகத்தில் மேலாண்மை தேரிந்தவர் யார்? இத்தனை கேள்விகளுக்கு விடை கண்டு தகவல்களை திரட்டி அறிக்கைகளை தயாரித்து அரசு/வங்கிகளுட ம் பேசி தொழில் தொடங்கும் நடைமுறைக்கு வரலாம்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.