- விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை
- இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
- ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
- கல்வி உதவித்தொகை
- திருமண உதவித்தொகை
- மகப்பேறு உதவித்தொகை
- மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
- முதியோர் ஓய்வூதியம்
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து கொள்ளவும் புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்களை மிள வாரியத்தில் உறுப்பினராக பதிவ செய்து கொள்ளவும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக கீழ் கண்ட பகுதிகளில் முகாம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மணப்பாறை வட்டத்தில் முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள்
- பண்ணப்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு -27.05.2025 (செவ்வாய்) – பண்ணாங்கொம்பு (வருவாய் ஆய்வாளர் அலுவலகம்)
- பெய்கைப்பட்டி- 28.05.2025 (புதன்) -பெய்கைப்பட்டி (கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்)
- கருப்பூர், புத்தாநத்தம் – 29.05.2025 (வியாழன்) – புத்தாநத்தம் (கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்)
- குமாரவாடி – 30.05.2025 (வெள்ளி்) – தொப்பாநயகன் பட்டி (கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்)
- செவலுர், கண்ணுடையான்பட்டி – 03.06.2025 (செவ்வாய்) – மணப்பாறை (வருவாய் ஆய்வாளர் அலுவலகம்)
- அனியாப்பூர், நல்லாம்பிள்ளை. 04.06.2025 (புதன்) என்.பூலாம்பட்டி (வருவாய் ஆய்வாளர் அலுவலகம்)
மருங்காபுரி வட்டத்தில் முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள்
- இக்கரைகோசி குறிச்சி- 05.06.2025 (வியாழன்) – இக்கரைகோசி குறிச்சி (கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்)
- கஞ்சானாயக்கம் பட்டி- 06.06.2025 (வெள்ளி) – கஞ்சானாயக்கம் பட்டி சி (கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்)
- மருங்காபுரி, யாகாபுரம் -09.06.2025 (திங்கள்) – வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், மருங்காபுரி (கல்லுப்பட்டி)
- துவரங்குறிச்சி- 10.06.2025 (செவ்வாய்) – துவரங்குறிச்சி (வருவாய் ஆய்வாளர் அலுவலகம்)
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம் மற்றும் மருங்காபுரி வட்டத்தில் வசிக்கும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறும் மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதிப்குமார்,இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்திருக்கிறார்