திருவெறும்பூர், மணிகண்டம், புள்ளம்பாடி (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியிருக்கிறார்கள். பயிற்சியில் சேர, 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், கல்வித்தகுதி வயது, வரம்பு, இட ஒதுக்கீடு மற்றும் விடுதி வசதி ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
அவற்றை கவனமாக பின்பற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வு தரவரிசை பட்டியல் கலந்தாய்வு விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி மாணவர்கள் மாநில அளவிலான இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவை தேர்ந்தெடுக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750-ம், 10ம் வகுப்பு பிளஸ்2 வரை அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும், மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 உதவித்தொகை பயிற்சி முடியும் வரை வழங்கப்படும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள் ஜீன் 13ம் தேதியாகும். கூடுதல் விவரங்களுக்கு திருச்சி 8508476230, 9442770034, மணிகண்டம் – 9443953420, புள்ளம்பாடி – 8508476230 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்திருக்கிறார்.