Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க உங்களுக்கு அதிக பணம் தேவையில்லை. மாதத்திற்கு ரூ.100 உடன் கூட தொடங்கலாம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அஞ்சல் அலுவலகம் கடிதங்களை அனுப்புவது மட்டுமல்லாமல், உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான பல திட்டங்களையும் வழங்குகிறது. இவற்றில் ஒன்று தான், தினமும் ரூ.222 முதலீடு செய்வதன் மூலம் ரூ.11 லட்சம் நிதி திரட்டக்கூடிய ஒரு சிறப்பு திட்டம் ஆகும். அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அது தான் போஸ்ட் ஆபிஸின் RD திட்டம் ஆகும். நீங்கள் பல தபால் அலுவலகத் திட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அவற்றில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில், தினமும் ரூ.222 முதலீடு செய்வதன் மூலம், ரூ.11 லட்சம் நிதியை உருவாக்கலாம். இந்த திட்டம் அரசாங்க உத்தரவாதத்துடன் வருகிறது. எனவே, உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பானது.
தபால் அலுவலக RD திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.222 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.6,660-ஆக இருக்கும்.  அதுவே 5 ஆண்டுகளில், நீங்கள் மொத்தம் ரூ.3,99,600 டெபாசிட் செய்வீர்கள். இந்த தொகை 6.7% வருடாந்திர வட்டியைப் பெறும். மேலும், இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் compounded, அதாவது வட்டி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கணக்கிடப்பட்டு அசல் இருப்பில் சேர்க்கப்படுகிறது. நீங்கள் உங்கள் பணத்திற்கு வட்டிக்கு வட்டி பெறுவீர்கள்.
தபால் அலுவலக RD திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.222 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.6,660-ஆக இருக்கும்.  அதுவே 5 ஆண்டுகளில், நீங்கள் மொத்தம் ரூ.3,99,600 டெபாசிட் செய்வீர்கள். இந்த தொகை 6.7% வருடாந்திர வட்டியைப் பெறும். மேலும், இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் compounded, அதாவது வட்டி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கணக்கிடப்பட்டு அசல் இருப்பில் சேர்க்கப்படுகிறது. நீங்கள் உங்கள் பணத்திற்கு வட்டிக்கு வட்டி பெறுவீர்கள்.
5 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்? 5 ஆண்டுகளுக்கு பிறகு, உங்களுக்கு ரூ.4,75,297 கிடைக்கும். இந்த முதலீட்டை இன்னும் 5 ஆண்டுகளுக்கு (அதாவது மொத்தம் 10 ஆண்டுகளுக்கு) தொடர்ந்தால், உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ.7,99,200 ஆகவும், மொத்த வருமானம் ரூ.11,37,891 ஆகவும் இருக்கும். ஒரு நாளைக்கு ரூ.222 மட்டுமே சேமிப்பதன் மூலம், 10 ஆண்டுகளில் ரூ11 லட்சம் நிதியை உருவாக்கலாம். உண்மையில் இவ்வளவு பெரிய நிதியை தினமும் சிறிய சேமிப்பிலிருந்து உருவாக்க முடியும்.
இந்த திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், தொடங்குவதற்கு உங்களுக்கு அதிக பணம் தேவையில்லை. நீங்கள் மாதத்திற்கு ரூ.100 உடன் கூட தொடங்கலாம். இளைஞர்கள், முதியவர்கள் அல்லது தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் கூட - யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம்.
இந்த திட்டத்தின் நன்மைகள்: இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், தொடங்குவதற்கு உங்களுக்கு அதிக பணம் தேவையில்லை. நீங்கள் மாதத்திற்கு ரூ.100 உடன் கூட தொடங்கலாம். இளைஞர்கள், முதியவர்கள் அல்லது தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் கூட – யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம்.
நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த அக்கவுண்ட்டை திறக்கலாம். உங்களுக்கு முன்கூட்டியே பணம் தேவைப்பட்டால், திட்டத்தில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்து கொள்ளலாம் . மேலும், நீங்கள் ஒரு வருடமாக தொடர்ந்து டெபாசிட் செய்து வந்தால், உங்கள் வைப்புத்தொகையில் 50% வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கான வட்டி 2% மட்டுமே கூடுதலாக இருக்கும், இது பணம் தேவைப்படும் நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.
நாமினி விதிகள்: இந்தத் திட்டம் ஒரு நாமினியை நியமிக்கும் விருப்பத்தையும் வழங்குகிறது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், நாமினி அக்கவுண்ட்டை கிளெய்ம் செய்யலாம் அல்லது தொடரலாம். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குச் செயல்படும், ஆனால் நீங்கள் அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். உங்கள் மாதாந்திர தொகையை சரியான நேரத்தில் டெபாசிட் செய்ய நினைவில் கொள்ளுங்கள். தவறவிட்டால், மாதத்திற்கு 1% அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக நான்கு தவணைகளைத் தவறவிட்டால் அக்கவுண்ட் க்ளோஸ் செய்யப்படும். உண்மையில் இந்த தபால் அலுவலக RD திட்டம் சிறிய சேமிப்பை ஒரு பெரிய நிதியாக மாற்றுவதற்கான பாதுகாப்பான மற்றும் எளிதான வழியாகும்.
நாமினி விதிகள்: இந்தத் திட்டம் ஒரு நாமினியை நியமிக்கும் விருப்பத்தையும் வழங்குகிறது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், நாமினி அக்கவுண்ட்டை கிளெய்ம் செய்யலாம் அல்லது தொடரலாம். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குச் செயல்படும், ஆனால் நீங்கள் அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். உங்கள் மாதாந்திர தொகையை சரியான நேரத்தில் டெபாசிட் செய்ய நினைவில் கொள்ளுங்கள். தவறவிட்டால், மாதத்திற்கு 1% அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக நான்கு தவணைகளைத் தவறவிட்டால் அக்கவுண்ட் க்ளோஸ் செய்யப்படும். உண்மையில் இந்த தபால் அலுவலக RD திட்டம் சிறிய சேமிப்பை ஒரு பெரிய நிதியாக மாற்றுவதற்கான பாதுகாப்பான மற்றும் எளிதான வழியாகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.