தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்திற்கு கடன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்திற்கு கடன் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஒரு கிராம் தங்கத்துக்கு, ரூ.6,000 வரை கடன் வழங்கப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு வழங்கப்படும் கடன் தொகை, ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, சுமார் 42 லட்சம் பேருக்கு, 45,000 கோடி ரூபாய் அளவுக்கு நகை கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.


