இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல். ஆகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. ஆனால், செலவு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பி.எஸ்.என்.எல். லாபம் தரும் நிறுவனமாக மாறியிருக்கிறது.
அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3ம் காலாண்டி பி.எஸ்.என்.எல். 262 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. இந்நிலையில், 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ம் காலாண்டிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 280 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு 4ம் காலாண்டில் பி.எஸ்.என்.எல். 849 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருந்தது.
தற்போது 3 மற்றும் 4ம் காலாண்டுகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அடுத்தடுத்து லாபம் ஈட்டியுள்ளது. 18 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து 2 காலாண்டுகளில் லாபம் ஈட்டுவது இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் 2007ம் ஆண்டு 2 காலாண்டுகளில் பி.எஸ்.என்.எல். லாபம் ஈட்டியிருந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இரு காலாண்டுகளில் லாபம் ஈட்டியிருக்கிறது.
அடுத்தடுத்து 2 காலாண்டுகளில் லாபம் ஈட்டியபோதும் 2025ம் நிதியாண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் நஷ்டத்தையே சந்தித்திருக்கிறது. ஆனால், இது கடந்த நிதி ஆண்டு நஷ்டத்தை விட பாதி அளவு குறைவாகும். கடந்த 2024ம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல். 5 ஆயிரத்து 370 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்தது. ஆனால், அந்த நஷ்டம் 2025ம் நிதியாண்டியில் 2 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
நடப்பு நிதியாண்டியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முழுமையான லாபகரமான நிறுவனமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.