Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்  விதிகளில் மாற்றம் ! என்னவென்று தெரிஞ்சுக்கோங்க…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் உட்பட பல்வேறு எதிர்கால செலவினங்களின் திட்ட மிடலுக்காக ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட் மீது அதிக பட்சமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் மூன்றரை கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டு, பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் சில விதிகளை மாற்றி அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்ப ட்டுள்ளன. அனைத்து தபால் நிலையங்களும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ள அனைவரும் இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

2 கணக்குகள் உள்ளதா?

பெண் குழந்தையின் தாத்தா / பாட்டி, தன் பேத்திக்காக செல்வ மகள் கணக்கு தொடங்கியிருந்தால், அந்தக் கணக்குகள் பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். ஒருவேளை ஒரே விவரங்களுடன் 2 செல்வ மகள் திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தால், அந்தக் கணக்கு உடனடியாக மூடப்படும். அத்தகைய கணக்குகள் நெறிமுறையற்றதாக கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

பான், ஆதார் இணைப்பு 

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் மற்றும் ஆதார் அட்டையை, கணக்குடன் இணைப்பது கட்டாயம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இணைக்கப்படாத நிலையில், உடனடியாக பான் மற்றும் ஆதார் எண்களை சேகரித்து கணக்கு விவரங்களில் இணைக்க தபால் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க தபால் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். பெண் பிள்ளைகளுக்கு 21 வயதாகும் போது இந்தக் கணக்கு முதிர்ச்சியடையும். அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்தால் மட்டுமே மொத்த டெபாசிட்டில் 50 சதவீதம் எடுக்க முடியும்.

இந்தக் கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்று. பெற்றோர் பான் கார்டு மற்றும் ஆதார் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.