Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

முதல்வரின் நீர் நிலை பாதுகாவலர் விருது

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

டந்த 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், ”தமிழகத்தி்ல் உள்ள 38 மாவட்டங்களில், நீர்நிலைகள் பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அரசுசாரா நிறுவனங்கள், தனியார் 100 பேரக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும்” என வனத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதை செயல்படுத்தும் விதமாக, நிர்வாக ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு, தமிழ்நாடு பருவகால மாற்ற திட்ட நிதியில் இருந்து இந்த விருதுக்கான் நிதியை வழங்கும் வகையில், கருத்துர அனுப்பும்படி, சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இதையடுத்து, 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விருதுத் தொகை ரூ.1 கோடி, நினைவுப்பரிசு மற்றம் சான்றிதழுக்காக ரூ.2 லட்சம், நிகழ்ச்சிக்காக ரூ.6 லட்சம், இதர செலவாக ரூ.2 லட்சம் என ரூ.1.10 கோடியை வழங்கும்படி கருத்தரு அனுப்பினார்.

அதை பரிசீலித்த தமிழக அரசு ரூ.42 லட்சத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.