BPO மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய/மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம், குறிப்பாக DOT (Department of Telecommunications) என்று கூறப்படும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் தங்கள் சேவையைத் தொடரவேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.
அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக மத்திய/மாநில அரசிடமிருந்து உரிய அனுமதி பெறுமாறு புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக தெரிவித்திருக்கிறார்கள்.
மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிக்கை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் வெப்சைட் மற்றும் Appகளை உருவாக்கி இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டாலும் அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இணைய வழி குற்றம் புரிவதற்கு உருவாக்கி கொடுத்தாலும் அது சட்டப்படி குற்றமாகும். அந்த App மற்றும் வெப்சைட்ஐ உருவாக்கி கொடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
மேலும் அனைத்துவிதமான இணையவழி குற்றம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் மற்றும் தகவல் சம்பந்தமாக இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413 2276144, 9489205246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.