Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆர்.பி.ஐ,யின் புதிய துணை ஆளுநர் யார் தெரியுமா ?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தாவை, இந்திய ரிசர்வ் வங்கி யின்  புதிய துணை ஆளுநராக மூன்று ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளதக தெரிவித்திருக்கிறார்கள்.

2025 ஏப்ரல் 7- முதல் 9-வரை நடைபெறவிருக்கும் ஆர்பிஐயின் பணவியல் கொள்கைக் குழு  கூட்டத்திற்கு முன்னதாக அவரது நியமனம் வந்துள்ளது என்றும் இந்த ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற மைக்கேல் பத்ராவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.Rbi

பிரபல பொருளாதார நிபுணரான பூனம் குப்தா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NCAER இல் சேருவதற்கு முன்பு, அவர் சர்வதேச நிதிக் கழகத்தில் முன்னணி பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திலும்  (IMF) ஆராய்ச்சிப் பதவிகளை வகித்திருக்கிறார்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பூனம் குப்தாவின்  சிறப்புகள்

அவர் சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.அவரது கல்விச் சான்றுகளில் கல்லூரி பார்க்கில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

அங்கு அவர் மேக்ரோ பொருளாதாரம், சர்வதேச நிதி மற்றும் வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்றார்.டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி பொருளாதாரப் பள்ளி மற்றும் இந்து கல்லூரியில் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

1998 ஆம் ஆண்டில், சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக EXIM வங்கி விருதை பெற்றிருக்கிறார்.பூனம் குப்தாவின் மேக்ரோ பொருளாதாரக் கொள்கையில் விரிவான நிபுணத்துவம், ஆர்பிஐயின் கொள்கை வகுப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும்  அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.