புதுடில்லி, செப்.12-
பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திாி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின்கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள், குடும்ப அடிப்படையில் ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையுடன் பயன் அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படி, தகுதி உள்ள மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான காா்டு வழங்கப்படும்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான் பாதுகாப்பு விாிவாக்க திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் மோடியால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது பயனாளிகளின் தளத்தின் தொடா்ச்சியான விாிவாக்கத்தைக் கண்டுள்ளது.
தொடக்கத்தில், இந்தியாவின் மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 40 சதவீத மக்களை உள்ளடக்கிய 10.74 கோடி ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. பின்னா், பயனாளிகளின் தளத்தை 10.74 கோடியில் இருந்து 10 கோடி குடும்பங்களாக 2022ம் ஆண்டில் மத்திய அரசு மாற்றியமைத்தது.