தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தங்க நகை மதிப்பீட்டாளருக்கான பயிற்சியை சென்னையில் வரும் 19 முதல் 23-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 5 நாட்கள் நாட்கள் நடத்த போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோக தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, காரட் அண்டு காரட், தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், தங்கம் (999%, 916%, 85%, 80%, 75%) தங்கம் தரம் அறிதல், ஆபரண கடனுக்கான கணக்கீட்டு முறை, ஐ.எஸ். ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள், ஹால் மார்க் தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடயாளம் காணுதல் அதற்கான வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் துறை வங்கிகளில் தங்க நகை மதிப்பீட்டாளர் பணிகள் குறித்தும் அவற்றில் சேருவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இந்த பயிற்சியில் சேர (ஆண், பெண், திருநங்கை) 18 வயதுக்கு மேற்பட்ட, 10 வது தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்கள். மேலும் தங்கி பயிற்சி பெற குறைந்த கட்டண வசதியுடைய தங்கும் விடுதிகளும் உள்ளன.
இதற்கு முன்பதிவு அவசியம் எனவும் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் . மேலும் இந்த தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.editn.in என்ற வலைதளத்திலும், விவரங்களை நேரில் வந்து அறிந்துகொள்ள விரும்புவோர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெரிந்துகொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார்கள்.
பயிற்சி நடைபெறும் இடம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ. அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. போன் 93602 21280, 95437 73337.