திருச்சி , EVR சாலையில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை வளாகம், 108 ஆம்புலன்ஸில் அவசர ஊர்தி சேவையில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் 108, FHS, 1962 (அனிமல் ஆம்புலன்ஸ்) சேவை பைலட் உண்டான முதல் கட்ட நேர்முகத் தேர்வு நாளை (மே 15)ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த காலிபணியிடங்கள் தொடர்பாக மாவட்ட மேலாளர் குமரன் கூறுகையில், மருத்துவ உதவியாளருக்கு தேவையான கல்வி தகுதிகள், B.,Sc நர்சிங், GNM, DMLT, ANM (12-ம் வகுப்பு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான B.,Sc Zoology, Botany, Bio-Chemistry, Bio-Technology, Micro biology இவைகளில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு 19 முதல் 30 வரை இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் தேர்வு முறையானது எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 16,990 வழங்கப்படும்.
ஓட்டுனருக்கான கல்வித்தகுதி பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 24 முதல் 35 வரை இருக்க வேண்டும். மேலும் தேர்வு முறையானது சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் பரிசோதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச உரிமம் பெற்று ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஓட்டுனருக்கான மாத சம்பளம் ரூ.16,790 வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறையில் தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் நேர்காணலுக்கு வரும்பொழுது தேவையான (கல்வித் தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம்ம, முகவரி சான்று, அடையாளச் சான்று) ஆகிய அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் கொண்டுவர வேண்டும்.
மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு 8925941843 , 8925941841 என்ற எண்ணிற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.