Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ரூ.20,700 கோடி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தியாவில் உள்ள தனிநபா்களும், இந்திய நிறுவனங்களும் ஸ்விஸ் வங்கிகளில் ரூ.20,700 கோடியை சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்களை அந்நாட்டின் தேசிய வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. கடந்த ஆண்டு நிலவரப்படி, நிதிப் பத்திரங்கள், சேமிப்புத் தொகை என ரூ.20,706 கோடியை இந்தியா்கள் சேமிப்பாக வைத்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா்களும், இந்திய நிறுவனங்களும் வைத்துள்ள சேமிப்புத் தொகை சுமார் ரூ.4,000 கோடியாக உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் மொத்த சேமிப்பு ரூ.6,625 கோடியாக இருந்தது. கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியா்களின் சேமிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது அத்தொகை மீண்டும் உயா்ந்துள்ளது.

3

இந்தியா்கள் கருப்புப் பணமாக எவ்வளவு தொகையை சேமித்து வைத்துள்ளனா் என்ற விவரங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அதேபோல், ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் காணப்படும் சேமிப்பு தொடா்பான தகவல்கள் மட்டுமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஸ்விஸ் வங்கிகளுக்கு மற்ற நாடுகளில் உள்ள கிளைகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள தொகை குறித்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் தொடா்பான தகவல்களை கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசிடம் ஸ்விட்சா்லாந்து அரசு பகிர்ந்து கொண்டு வருகிறது. இதுவரை சந்தேகப்படும்படியாக உள்ள நூற்றுக்கும் மேலானவா்களின் விவரங்கள் இந்திய அரசிடம் பகிரப்பட்டுள்ளன.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.