Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 

திருச்சி மாவட்டத்தில் 2024-25 ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரா்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவா்களது குடும்ப வாரிசுதாரா்கள் குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவா்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, ஆன்லைனில் மட்டுமே நவம்பா் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இக்கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப கல்லூரியில் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு திருச்சி முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப. அவா்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.