ஆண்டு தோறும் லட்டசக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி பல நகரங்களுக்கு செல்கிறார்கள். அதிலும் பல ஆயிரம் இளைஞர்கள் அரசு வேலைக்காக இரவும் பகலுமாக படித்து வருகிறார்கள். அந்த வகையில் தேர்வுக்கு எளிமையான முறையில் தயார் செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிட்டப்பட்டது. விஏஓ, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்றும், 3,935 காலிப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் விண்ணப்பிக்க மே 24 ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே மீதம் இருப்பதால் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார்கள் .