மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து நாட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப தங்களுடைய பட்ஜெட்டை திட்டமிடுவது நல்லது.
அந்த வகையில், சமையல் எரிவாயு விலை, ரயில் பயணம் மற்றும் மொபைல் போன் பயன்பாட்டு விதிகள் என மூன்று முக்கியமான மாற்றங்கள் வருகின்றன. இதுதொடர்பான முழுமையான விவரங்களை இந்த பதிவில் தற்போது பார்ப்போம்.
ரயில் டிக்கெட்… அடிக்கடி ரயில்களின் பயணம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் இதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இனி யுடிஎஸ் செயலி செயல்படாது. மார்ச் 1ஆம் தேதியிலிருந்து பயணிகள் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு யுடிஎஸ் செயலியை பயன்படுத்த முடியாது அதற்கு மாற்றாக ரயில் ஒன் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
உங்களுடைய தொலைபேசியில் இருந்து சிம் கார்டை அகற்றி விட்டால் whatsapp போன்ற செயலிகள் வேலை செய்யாது. டிஜிட்டல் சார்ந்த மோசடிகளை தடுக்க இந்த நடைமுறையை அரசு கொண்டுவர இருக்கிறது.
எனவே சிம் பைண்டிங் விதிமுறைகள் வரும் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன. வாட்ஸ் அப் வெப் சேவைகள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும் பயனர்கள் மீண்டும் அதனை லாகின் செய்து கொள்ள வேண்டும். போலி எண்கள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.



