தென் தமிழகத்தில் முதன்முதலாக பச்சிளம் குழந்தைகளுக்கு இதய சிகிச்சை-திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை..
திருச்சி காவேரி மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பிரிவில் மா காவேரியில், பிறந்து 48 மணி நேரமே ஆன 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தையின் இதய வாழ்வு மிக சுருங்கிய நிலையில் இருந்தது.
இந்த சிக்கலான இதய பிரச்சனையால் குழந்தைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. ஆகையால் இந்த குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை மூலம் ஒரு சிறிய பலூன் ( பலூன் வால்வுலோபிளாஸ்டி) தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியாக செலுத்தப்பட்டு குழந்தையின் குறுகிய வாழ்வு விரிவாக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் பிறந்து 11 நாட்களே ஆன மற்றொரு பெண் குழந்தை,தொடர்ச்சியான சுவாச பிரச்சினையால் அவதிபட்டது , பிறப்பிற்கு பிறகு மூட வேண்டிய ரத்த நாளம் மூடவில்லை. இதைத்தொடர்ந்து பிக்கோலோ எனப்படும் ஒரு சிறிய சாதனம் மூலம் அந்த திறப்பு அடைக்கப்பட்ட, இதன் மூலம் குழந்தையின் சுவாசம் 48 மணி நேரத்திற்குள் சீராகி விரைவில் குணமடைந்தது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இனி இது போன்ற இதய சிகிச்சைகளுக்கு சென்னை, கோவைக்கு செல்ல தேவையில்லை என்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் வினோத்குமார், மணிராம்கிருஷணா, கெ.செந்தில்குமார் மற்றும் குழுவினரை, திருச்சி காவேரி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான டி. செங்குட்டுவன் அளித்த பேட்டியில் பாராட்டியிருக்கிறார்.