வோடஃபோன் ஐடியா தமது நிறுவன பங்குகளை மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு போதிய நிதி உதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லை எனில் 2025-26 நிதியாண்டு காலத்துக்கு பிறகு எந்த சேவையையும் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என தெரிவித்திருக்கிறார்கள்.
வோடஃபோன் நிறுவனம் 18,000 கோடியை செலுத்துவதற்கு, அரசு காலக்கெடு அளித்திருந்தது. இந்நிலையில் அவர்கள் நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் அந்த தொகையை செலுத்த முடியவில்லை என்றும் இதனை காரணம் காட்டி வங்கிகள் எங்களுக்கு கடன் தர மறுக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் சேவை முடங்கும் அபாய நிலைக்கு நாங்கள் ஆளாகுவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தவணை செலுத்தும் முறையை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் 33.1 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது . வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஸ்பெக்டர்ம் ஏல நிலுவைகள், ஒத்திவைக்கப்பட்ட ஏல நிலுவைகள் உள்ளிட்டவற்றை பங்குகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது.
இருப்பினும் இன்னும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது அந்நிறுவனம். வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழல் உருவானால் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் குறிப்பிடத்தக்க இழப்பை சந்திக்க நேரிடும் என்று இத்துறை சார் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இதனால் ஏராளமான பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.