இந்தியாவின் மிகப்பொரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ, யெஸ் பேங்கில் இருக்கும் 13.19 % பங்குகளை எஸ்எம்பிசி எனப்படும் Sumitomo Mitsui Banking Corporation நிறுவனத்திற்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறாா்கள்.
ஒரு பங்கின் மதிப்பு 21 ரூபாய் 50 காசுகள் என்ற அளவில் எஸ்பிஐ நிறுவனம் தங்கள் வசம் இருக்கும் சுமாா் 4,13,44,04,897 பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறாா்கள். இதன் மூலம் எஸ்பிஐ நிறுவனத்திற்கு 8088.97 கோடி ரூபாய் கிடைக்கும்.

யெஸ் பேங்க் இந்தியாவை சோ்ந்த தனியாா் வங்கி சேவை நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 300 மாவட்டத்தில் 1198 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான் கடந்த மாதம் ஜப்பானை சோ்ந்த எஸ்எம்பிசி நிறுவனம் யெஸ் வங்கியை கையகப்படுத்துவது தொடா்பாக விண்ணப்பம் செய்து அதற்கான ரிசா்வ் வங்கியின் ஒப்புதலையும் பெற்றது. இதன் மூலம் எஸ்எம்பிசி நிறுவனம் யெஸ் வங்கியின் 51% பங்குகளை வாங்கி அதனை தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவர இருப்பதாக தெரிவித்திருக்கிறாா்கள்.