Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

காணாமல் போன  18 லட்சம் பிஎஃப் கணக்குகள்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

காணாமல் போன  18 லட்சம் பிஎஃப் கணக்குகள்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. பெரும்பாலோனோர் வேலை இழந்தனர். ஊரடங்கு தளர்விற்கு பின்பு பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன என்றாலும் அக்டோபர் மாதத்தில் 30,800 நிறுவனங்கள் பிஎஃப் நடைமுறையில் இருந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இபிஎஃப் நிறுவனத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான 5,34,869 நிறுவனங்களில் 30,800 நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியேறி உள்ளன. தற்போது 5,04,044 நிறுவனங்கள் மட்டுமே பிஎஃப் நடைமுறை பட்டியலில் உள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் 4.768 கோடியாக இருந்த பிஎஃப் கணக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 4.582 கோடியாக அதாவது சுமார் 18 லட்சம் குறைந்துள்ளது.

பி எஃப் தொகைக்கு செலவு செய்ய முடியாத நிலை காரணமாக நிறுவனங்கள் வெளியேறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிவு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் சந்தையில் தேவை குறைந்துள்ளதன் காரணமாக ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.