தமிழக முதலமைச்சர் அவா்களின் ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை முகாம் நடத்திடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களின் முக்கிய நோக்கமானது மாணவா்களை உயா்கல்வி அல்லது திறன் பயிற்சிக்காக ஊக்குவித்தல் ஆகும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 25.09.2024 அன்று ஜமால் முகமது கல்லூரியில் இம்முகாம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9.00 மணி துவங்கி மாலை வரை நடைபெறும்.
இம்முகாமில் உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்து அலுவா்களால் எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும் எவ்வாறு உகந்த கல்வி படிப்பினை தேர்ந்தெடுப்பது வேலை வாய்ப்பினை பெறுவது தொடர்பாக எடுத்துரைக்கப்பட உள்ளது.
அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு உயா்கல்வி தொடா்பாக வழிகாட்டல்களையும் தங்கள் நிறுவனத்திற்கான மாணவா்கள் சோ்க்கையையும் மேற்கொள்ள உள்ளனா். மேலும் உயா்கல்வி சோ்க்கை மற்றும் வங்கி கடனுதவி தொடா்பாக அரங்குகள் அமைத்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.
மேலும் வங்கிகடன் உதவித்திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக முன்னோடி வங்கி அலுவலா்கள் எடுத்துரைக்க உள்ளனா். அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மகளிர் திட்ட அலுவலா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலஅலுவலா் மற்றும் பிற்படுத்தப்பட்ட நல அலுவலா் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் ஆகியோா் எடுத்துரைக்க உள்ளனா். மாவட்ட சமூக நல அலுவலா் மற்றும் குழந்தைகள் நல அலுவலா் அவா்களால் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.
எனவே 8 ஆம் வகுப்பு தோ்ச்சி / தோல்வி 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தோ்ச்சி / தோல்வி பெற்ற மாணவா்கள் திருச்சி மாவட்டத்தில் 25.09.2024 அன்று ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என தொிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப அவா்கள் தொிவித்துள்ளாா்.
செய்தி வெளியீடு
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.