Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய வயது வரம்பு அதிகரிப்பு!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 லிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவே நீடிக்கிறது. இந்தியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோர் 75 வயது வரை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோரின் சேமிப்புத் தொகை எந்த வகையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து முதலீட்டு சதவீதம் மாறுபடும். 65 வயதைக் கடந்தோர் தேசிய ஓய்வூதியத்திட்டத்தில் இணையும் போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சொத்துக்களில் (ஆட்டோ சாய்ஸ்) 15 சதவீதம் வரை மட்டுமே முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

சொத்துக்கள் மீதான முதலீடுகளை ஓய்வூதியதார்களே முடிவு செய்தால் (ஆக்டிவ் சாய்ஸ்) அதில் 50 சதவீதம் வரையிலான தொகையை முதலீடு செய்ய முடியும். 65 வயதைக் கடந்தவர்கள்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தால், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு பிறகே திட்டத்தை விட்டு வெளியேற முடியும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

திட்டத்தில் இருந்து வெளியேறும் ஓய்வூதியதாரர்கள், குறைந்தபட்சம் 40 சதவீதத் தொகையை எதிர்கால ஓய்வூதியத்துக்காக வைத்துக் கொண்டு மீதித்தொகையை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ளலாம் என  தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் (பிஎஃப்ஆர்டியு) அறிவித்துள்ளது.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.