Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன்.. மத்திய அரசின் பலே திட்டம்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன்.. மத்திய அரசின் பலே திட்டம்!

சீனியர் சிட்டிசன்கள் பென்சன் பெறுவதற்காக பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனியர் சிட்டிசன்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட பென்சன் திட்டங்களில் வய வந்தனா யோஜனா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்து எப்படி பென்சன் பலன்களை பெறுவது என்பதை பார்க்கலாம். இத்திட்டம் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

இத்திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட விகிதத்தில் பென்சன் கிடைக்கும். சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் பென்சன் விகிதம் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் மத்திய நிதியமைச்சகத்தால் முடிவு செய்யப்படும். தற்போது 2022-23ஆம் நிதியாண்டுக்கு பென்சன் விகிதம் 7.40% என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வய வந்தனா யோஜனா திட்டத்தை நிர்வகிப்பதற்கான முழு அதிகாரமும் எல்ஐசி நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

3

இந்த பாலிசியை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் https://licindia.in/ இணையதளம் வாயிலாக முதலீடு செய்யலாம். அல்லது நேரடியாக எல்ஐசி அலுவலகத்துக்கு சென்று பாலிசியை வாங்கலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இத்திட்டத்துக்கு வரி சலுகைகள் ஏதும் இல்லை. 60 வயதை தாண்டியவர்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 2023 மார்ச் மாத இறுதிக்குள் பாலிசியை வாங்கிட வேண்டும் இத்திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

அதிகபட்சமாக 9,250 ரூபாய் பென்சன் கிடைக்கும். பாலிசி வாங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்தபின் கடன் பெற்றுக்கொள்ளலாம். பாலிசி விலையில் 75% வரை கடனாக வாங்கலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.