Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சொத்து பத்திரம் பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சொத்து பத்திரம் பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்..

பத்திரம் பதிவு செய்ய அதற்குரிய ஆவணத்தைப் பொறுத்து தேவைகள் மாறுபடும். பொதுவாக, பத்திரம் பதிவு செய்வதற்கு அதற்கு முந்திய ஆவணம் அதாவது, தாய்ப் பத்திரம் தேவைப்படும். தாய் பத்திரம் வங்கியில் அடமானத்தில் இருந்தால் வங்கியின் கடிதம், தொலைந்து போய் இருந்தால் காவல்துறையின் சான்று, அந்தச் சொத்தின் உரிமையாளர் மறைந்து, அவரின் வாரிசுகள் இருந்தால் உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பட்டா நிலமாக இருந்தால், அந்தச் சொத்துக்கு வருவாய்த்துறை வழங்கிய பட்டா தேவைப்படும். அந்தச் சொத்தை எழுதிக் கொடுப்பவர்கள், சொத்தை வாங்குபவர்கள், சாட்சிக் கையெழுத்திடுபவர்கள் ஆகியோரின் அரசு வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டை (ஆதார் கார்டு) போன்றவை இருக்க வேண்டும். இவைதான் பத்திரம் பதிவு செய்வதற்கு அவசியம் தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.