கடந்த நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குடும்பங்களின் நிதி சேமிப்பு, 8.2% மதிப்பிடப்பட்டுள்ளது .
கொரோனா முதல் அலையின்போது 8.2 % குறைந்தது. இது, இரண்டாவது காலாண்டில், 10.4 % மாக இருந்தது. மேலும், , செப்டம்பர் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7.7 % மாக இருந்தது, டிசம்பர் காலாண்டில், 3 % குறைந்தது.
குடும்பத்தின் கடன், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தரவுகளின்படி, டிபாசிட்டுகள், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு முதலீடுகள், பணம், சிறுசேமிப்பு, பென்சன் பண்டு போன்றவை உள்ளிட்ட நிதி சொத்துக்களின் மதிப்பு, 6.93 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடன்களை பொறுத்தவரை, 2.48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.